மதுரைமா நகர் வாழும் என்
நண்பா சிவ குமார உன்
முத்தான புத்தாண்டு வாழ்த்து
பார்த்தேன் சுவைத்தேன் மகிழ்தேன் !
கற்றது பெருக்கி நற்றமிழ் வளர்க்கும்
சைவத் திருமறை யோ(ன்) நீ !
உற்றது வேண்டி பெற்ற(து) நன்
சைவத் திருமறை யாம்கேட்டு நாளும்
நலம் விளைந்திடும் அருட் பாவே!
நவில் கூறும் நடை அழகில்
சுவை ஊரும் தமிழ் அமுதே !
சைவ நெறி உன் உயிர்
(உன்)னுயிர் போயினும் நெறி வழுவா
ஏந்தலே! அய்யனே! நீவிர் நலம்
பல பெற்று சைவம் காத்து நிற்க
அருள் புரிவானே அந்த ஆறுமுகனே

No comments:
Post a Comment